விருதுகள்

செம்மொழித் தமிழ்த் திட்டத்தின் சார்பில் தகுதியுள்ள அறிஞர்களுக்குக் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்களால் வழங்கப்படும்.

1. தொல்காப்பியர் விருது

மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் உரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஒர் இந்திய அறிஞருக்குரியது.

2. குறள்பீடம் விருது

மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் உரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும் ; ஒவ்வோர் ஆண்டும் இரு விருதுகள் – அயல்நாட்டவருக்கு ஒன்று, அயல்நாடு வாழ் இந்தியருக்கு ஒன்று.

3. இளம் அறிஞருக்கான விருது

மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஒரு இலட்சம் ரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஐந்து விருதுகள் – முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குட்பட்ட இந்திய இளம் அறிஞர்களுக்குரியது.

செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கான குடியரசுத்தலைவர் விருதுகள்

விருதுகள் ஆண்டுவாரியாக :

2005-2006

தொல்காப்பியர் விருது பேராசிரியர் அடிகளாசிரியர்
குறள்பீடம் விருது வழங்கப்படவில்லை
இளம் அறிஞர் விருது முனைவர் R. அறவேந்தன்
முனைவர் Y. மணிகண்டன்
முனைவர் S. கலைமகள்
முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர்
முனைவர் K. பழனிவேலு

2006-2007

தொல்காப்பியர் விருது வழங்கப்படவில்லை
குறள்பீடம் விருது முனைவர் ஜார்ஜ் எல். ஹார்ட்
இளம் அறிஞர் விருது முனைவர் S. சந்திரா
முனைவர் அரங்கபாரி
முனைவர் மு. இளங்கோவன்
முனைவர் M. பவானி
முனைவர் R. கலைவாணி

2007-2008

தொல்காப்பியர் விருது வழங்கப்படவில்லை
குறள்பீடம் விருது வழங்கப்படவில்லை
இளம் அறிஞர் விருது முனைவர் A. செல்வராசு
முனைவர்P. வேல்முருகன்
முனைவர்A. மணவழகன்
முனைவர் M.சந்திரசேகரன்
முனைவர் S. சைமன் ஜான்

2008-2009

தொல்காப்பியர் விருது பேராசிரியர் சி. கோவிந்தராசனார்
குறள்பீடம் விருது பேராசிரியர் பிரான்சிஸ் குரோ
இளம் அறிஞர் விருது முனைவர் A லக்ஷ்மிதத்தை
முனைவர் S. மாதவன்
முனைவர் M. ராமகிருஷ்ணன்
முனைவர் S. செந்தமிழ்ப்பாவை

2009-2010

தொல்காப்பியர் விருது பேராசிரியர். ஐராவதம் மகாதேவன்
குறள்பீடம் விருது பேராசிரியர். ஜெரோஸ்லவ் வாசெக்
இளம் அறிஞர் விருது Dr. T. சுரேஷ்
Dr. S. கல்ப்பனா
Dr. R. சந்திரசேகரன்
Dr. வாணி அறிவாளன்
Dr. C. முத்தமிழ்ச்செல்வன்

2010-2011

தொல்காப்பியர் விருது பேரா. தமிழண்ணல் (பெரியகருப்பன்)
குறள்பீடம் விருது பேரா. ஜான் ரால்டன் மார்
இளம் அறிஞர் விருது முனைவர் T. சங்கையா
முனைவர் அ. ஜெயக்குமார்
முனைவர் அ. மணி
முனைவர் S. சிதம்பரம்
முனைவர் K. சுந்தரபாண்டியன்

2011-2012

தொல்காப்பியர் விருது பேரா. செ. வை. சண்முகம்
குறள்பீடம் விருது முனைவர் ஈவா மரியா வில்டன்
இளம் அறிஞர் விருது முனைவர் கா. அய்யப்பன்
முனைவர். ஏ. எழில்வசந்தன்
முனைவர் க. ஜவகர்

2012-2013

தொல்காப்பியர் விருது டாக்டர். R. கிருஷ்ணமூர்த்தி
குறள்பீடம் விருது வழங்கப்படவில்லை
இளம் அறிஞர் விருது முனைவர் அ. சதிஷ்
முனைவர் இரா. வெங்கடேசன்
முனைவர் ப. ஜெய்கணேஷ்
முனைவர் எம். ஆர். தேவகி
முனைவர் அலிபாவா

2013-2014

தொல்காப்பியர் விருது முனைவர் சோ. ந. கந்தசாமி
குறள்பீடம் விருது வழங்கப்படவில்லை
இளம் அறிஞர் விருது முனைவர் உல. பாலசுப்பிரமணியன்
முனைவர் கலை.செழியன்
முனைவர் சோ. ராஜலட்சுமி
முனைவர் த. மகாலெட்சுமி
முனைவர் சௌ. பா. சாலாவாணிஸ்ரீ

2014-2015

தொல்காப்பியர் விருது முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
இளம் அறிஞர் விருது முனைவர் அ. சதீஷ்
முனைவர் ஜெ. முத்துச்செல்வன்
முனைவர் ப. திருஞானசம்பந்தம்
முனைவர் மா. வசந்தகுமாரி
முனைவர் கோ. சதீஸ்

2015-2016

தொல்காப்பியர் விருது முனைவர் இரா. கலைக்கோவன்
இளம் அறிஞர் விருது முனைவர் மு. வனிதா
முனைவர் வெ. பிரகாஷ்
முனைவர் ஸ்ரீ. பிரேம்குமார்
முனைவர் க. பாலாஜி
முனைவர் முனீஸ்மூர்த்தி

தொடர்புக்கு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.